search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானைகள் அட்டகாசம்"

    • 3 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை மிதித்தும் சேதப்படுத்தின.
    • விவசாயிகள் பட்டாசு வெடித்தும், தீபந்தம் காட்டியும் யானைகளை விரட்டினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது வனப்பகுதி யை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இதேபோல் சாலைகளில் நின்றும் வாகன ஓட்டிகளை அச்சு றுத்தி வருகிறது. இந்நிலையில் தாளவாடி அருகே உள்ள கரளவாடி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவர் 2 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

    இந்நிலையில் ஜீர் கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் உதயகுமாரின் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. சத்தம் கேட்டு எழுந்து வந்த உதயகுமார் தோட்டத்துக்கு ஓடிவந்து பார்த்தார்.

    அப்போது வாழைகளை யானைகள் சேதப்படுத்து வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்து விவசாயி களை செல்போனில் உதவிக்கு அழைத்தார். அதன் பெயரில் அங்கு வந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், தீபந்தம் காட்டியும் யானைகளை விரட்டினர்.

    அதிகாலை 3 மணி வரை அட்டகாசத்தில் ஈடுபட்ட யானைகள் அதன் பின்னரே அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.

    யானை புகுந்ததால் சுமார் 500 வாழைகள் சேதம் அடைந்தன. இதனையடுத்து வனத்துறையினர் தனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயி உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • 5 குட்டிகளுடன் 12 யானைகள் வனத்தை விட்டு வெளியில் வந்தன.
    • ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை பேரூர் அருகே தீத்தி பாளையம் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் உள்ளவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த பகுதியையொட்டி வனப்பகுதி உள்ளது.

    இதனால் வனவிலங்குகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக யானையின் அட்டகாசம் அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 5 குட்டிகளுடன் 12 யானைகள் வனத்தை விட்டு வெளியில் வந்தன. இந்த யானைகள் முதலில் அந்த பகுதியில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்த மான இடத்திற்குள் புகுந்தது. அங்கு பயிரிட்டு இருந்த அரை ஏக்கர் பயிர்களை மேய்ந்தது.

    தொடர்ந்து தீத்திபாளையம் கிராமத்தில் உள்ள நடராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு வெகுநேரமாக சுற்றி திரிந்த யானை கூட்டங்கள் 2 ஆழ்துளை கிணறுகளிலுள்ள உபகரணங்களை முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது.

    மேலும் தோட்டத்தில் தக்காளி பயிர் செய்வதற்காக போடப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன உபகரணங்களையும் சேதப்படுத்தியது. இதனால் அவருக்கு ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • ராகி அவரை, துவரை, தக்காளி, பீன்ஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேதப்படுத்தின.

    தேன்கனிகோட்டை,

    கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

    இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 50 யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி திம்மசந்திரம், மேகலகவுண்டனூர், காடுலக்கசந்திரம், தின்னூர் கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து ராகி அவரை, துவரை, தக்காளி, பீன்ஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேதப்படுத்தின.

    தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக இரண்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றது.
    • சுவரை உடைத்துக் கொண்டு இரண்டு யானைகள் உள்ளே நுழைந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக கிராமங்களில் சுற்றி திரியும் இரண்டு யானைகளை பிடிக்க தருமபுரி மாவட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக இரண்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றது. விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு அப்பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகளையும் பொதுமக்களையும் மிரட்டி வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை ஏழு மணிக்கு கோணங்கி அள்ளி, சின்ன பங்கு நத்தம், கவுண்டன் கொட்டாய், கூலி கொட்டாய், ஆகிய கிராமங்கள் வழியாக சோம் பட்டி கிராமத்தில் சுமார் 160 ஏக்கர் பரப்பளவு உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான பவர் கிரேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நுழைவு வாயில் சுவரை உடைத்துக் கொண்டு இரண்டு யானைகள் உள்ளே நுழைந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இங்குள்ள பவர் கிரேட் கார்ப்பரேஷன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடகா ஆந்திரா கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் இங்கிருந்து பகிர்வு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக இரண்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றது.
    • பவர் கிரேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நுழைவு வாயில் சுவரை உடைத்துக்கொண்டு இரண்டு யானைகள் உள்ளே நுழைந்து சேதப்படுத்தியுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக இரண்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றது. விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு அப்பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகளையும் பொதுமக்களையும் மிரட்டி வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு கோணங்கி அள்ளி, சின்னபங்கு நத்தம், கவுண்டன் கொட்டாய், கூலி கொட்டாய் ஆகிய கிராமங்கள் வழியாக சோம்பட்டி பகுதியில் புகுந்து சேதப்படுத்தியுள்ளது.

    பின்னர் அதன் அருகே அமைந்துள்ள சுமார் 160 ஏக்கர் பரப்பளவு உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான பவர் கிரேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நுழைவு வாயில் சுவரை உடைத்துக்கொண்டு இரண்டு யானைகள் உள்ளே நுழைந்து சேதப்படுத்தியுள்ளது.

    • கதிர்நாயக்கன்பாளையம், லட்சுமி நகரில் புதிதாக வீட்டுமனை பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • இந்த பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் ஷெட் அமைத்து தங்கியுள்ளனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூரை அடுத்த பாலமலை அடிவாரத்தில் உள்ள கதிர்நாயக்கன்பாளையம், லட்சுமி நகரில் புதிதாக வீட்டுமனை பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் ஷெட் அமைத்து தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை குட்டியுடன் 2 யானைகள் இந்த பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஷெட்டை உடைத்து உள்ளே இருந்த உணவுப் பொருள்களை வெளியே இழுத்து தின்றன.

    இதுகுறித்து பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து அங்கு வந்த வனத்துறை வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்ட முயன்றனர்.

    அப்போது யானைகள் அங்குள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் பின்புறம் உள்ள திருமலா கார்டன் வழியாக ஜல்லிமேடு புதூருக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானைகள் தேவம்பாளையம் வழியாக காட்டுக்குள் சென்றன.

    இந்நிலையில் கோவனூரில் உள்ள ரமேஷ் என்பவரின் சோளக்காட்டுக்குள் 3 யானைகள் நேற்று இரவு நுழைந்தது. நீண்டநேரம் அங்கேயே நின்று கொண்டிருந்த யானைகள் மீண்டும் நாயக்கன்பாளையம் நோக்கி நகர்ந்தன.

    அப்போது மீண்டும் வேட்டைத் தடுப்புக்காவலர்கள் அவற்றை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். டிசம்பர் மாதம் யானைகள் வலசைக் காலம் என்பதால் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வரும் பிப்ரவரி வரை இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் இருக்கும்.

    எனவே இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வோர் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • கிராம அஞ்சலகத்தை 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் சூறையாடின.
    • பள்ளியில் உள்ள சத்துணவு அறையை சேதப்படுத்தி, அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றன.

    ஊட்டி,

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்களை தாக்கி வருகிறது. தொடர்ந்து வீடுகளையும் சேதப்படுத்தி வந்தன.

    தற்போது பேரூராட்சி அலுவலகம் மற்றும் அதன் அருகே உள்ள அரசு தொடக்க பள்ளி, நூலகம், கிராம அஞ்சலகத்தை 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் சூறையாடின.

    இதில் பேரூராட்சி அலுவலக பொருட்கள், பள்ளி வகுப்பறைகள், நூலகத்தில் இருந்த கணினி மற்றும் தளவாடப் பொருட்கள், அஞ்சலகத்தில் இருந்த பதிவேடுகள் நாசமானது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை சூறையாடின.

    தொடர்ந்து பள்ளியில் உள்ள சத்துணவு அறையை சேதப்படுத்தின. பின்னர் அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றன.

    மேலும் அங்குள்ள நூலகத்தை சேதப்படுத்தின. 3-வது முறை இதேபோல் அனைத்து கட்டிடங்களிலும் இருந்த கதவுகளை காட்டு யானைகள் வளைத்து பயன்படுத்த முடியாத வகையில் சேதப்படுத்தி உள்ளது.

    தகவல் அறிந்த ஓவேலி பேரூராட்சி மற்றும் வருவாய், வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை தின்று பழகி விட்டதால் காட்டு யானைகள் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்து 3-வது முறையாக அட்டகாசத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    எனவே, பேரூராட்சி அலுவலக பகுதியில் இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இனிவரும் நாட்களில் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.

    • வனப்பகுதியில் இருந்து வந்த 10 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்த வாழையை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
    • யானைகளால் 2 ஏக்கர் வாழைகள், 10 தென்னை மரம் சேதமடைந்தது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, மான், கரடி, யானை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வன வில ங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேஷன்நகர் கிராமத்தை சேர்ந்தவர் வரதப்பன் (47). இவர் தனது 5 ஏக்கர் தோட்டத்தில் நேந்திரம்வாழை சாகுபடி செய்துள்ளார்.

    நேற்று இரவு 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த 10 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்த வாழையை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.

    இதைப்பார்த்த விவசாயி வரதப்பன் பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் அளித்தார். பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து சப்தம் போட்டு யானைகளை துரத்தினர்.

    ஆனால் யானை வனப்பகுதியில் செல்லாமல் வாழையை தொடர்ந்து சேதபடுத்தியது. அதிகாலை 6 மணியளவில் யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது. யானைகளால் 2 ஏக்கர் வாழைகள், 10 தென்னை மரம் சேதமடைந்தது.

    இதனையடுத்து சேதம டைந்த விவசாய ப்பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும், அகலமா கவும் அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பழனி அருகே கரும்பு, சோளக்காட்டுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.
    • வனத்துறையினருக்கு போதிய வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் கோம்பைப்பட்டி கிராமம், மேற்கு தொடர்ச்சி மலை யடிவாரத்தில் அமைந்து ள்ளது. இங்கு தண்ணீர் வளம் சிறப்பாக இருப்பதால் விவசாயிகள் கரும்பு, வாழை, நெல் ஆகியவற்றை பயிர் செய்து வருகின்றனர்.

    தற்போது வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டு யானைகள் கூட்டமாக அடிவாரம் பகுதியில் இறங்கியதோடு மட்டுமின்றி, விளைநிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்குமுன் அதிகாலை கோம்மைப்பட்டி மூலக்கடையில் உள்ள தர்மராஜ் எனபவர் கரும்பு தோட்டத்தில் புகுந்த யானைகள் பயிர்களை சேதப்படுத்தின. தொடர்ந்து அதே பகுதியில் உள்ள சின்னத்துரை என்பவரது தோட்டத்திலும் கரும்பு, தென்னங்கன்றுகளை சேதப்படுத்தின. அதேபோல் நேற்று முன்தினம் பொந்திலிதுரை என்பவர் தோட்டத்தில் கரும்பு பயிர்களை சேதப்படுத்தின.

    இது குறித்து விவசாயிகள், வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் யாரும் கண்டு கொள்ளாததால் விவசாயிகள் கவலையடை ந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு சுப்பிர மணி என்பவர் தோட்டத்தில் புகுந்த யானைகள் மக்காச்சோள காட்டை சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளன. கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் இப்பகுதியில் சுற்றுத்திரிவது குறித்து ஒட்டன்சத்திரம் வனத்துறை யினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் அவர்கள் யானையை விரட்டுவதற்கு போதிய வெடிகள் இல்லையென்றும் அதனால் அங்கு வர வாய்ப்பில்லை என்றும் பதிலளித்துள்ளனர்.

    அதே நேரம் யானைகள் ஊருக்குள் புகுந்தால், மனித உயிர்களுக்கு இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே மனித உயிர் இழப்பு ஏற்படும் முன் வனத்துறையினருக்கு போதிய வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • பெரும்பாறை பகுதியில் யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன.
    • இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த யானை வீடு மற்றும் பயிர்களை சேதப்படுத்தியது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் சோலைக்காடு, நேர்மலை, கடைசி கூட்டுக்காடு, கொக்குப்பாறை உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. நேற்று அப்பகுதியில் உள்ள காபி தோட்டங்களில் காட்டு யானைகள் திடீரென புகுந்தன.மேலும் தோட்டத்தின் முள்வேலியை உடைத்து சேதப்படுத்தின.

    இது மட்டுமின்றி தோட்டங்களில் பயிரிட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு, பாக்கு மரம் வீடு போன்றவற்றை நாசப்படுத்தின. இதனால் காபி தோட்ட உரிமையாளர்கள், தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கூலி தொழிலாளிகள் வேலைக்கு வர மறுக்கின்றனர். எனவே அந்த காட்டு யானைகளை விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×